குப்பைக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பவானி ஆற்றின் அவலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் ஒருபகுதி பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். 

மேட்டுப்பாளையம் பகுதியில் பாவனி ஆறு பாயும் வழித்தடம் ஒன்று காந்தி மைதான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே டாஸ்மாக் கடையும் செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு மது அருந்த வரும் குடிமகன்கள், மதுவை அருந்திவிட்டு, காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், கவர்களை பவானி ஆறு பாயும் வழித்தடத்தில் வீசியெறிந்து செல்கின்றனர். இதனால், அங்கு, பவானி ஆறு பாயும் வழித்தடம் இருந்ததா என்ற சந்தேகம் எழும்படியான நிலை உருவாகியுள்ளது. மேலும், குடிபோதையில், போதை ஆசாமிகள் இந்தப் பகுதியில் மலம் கழித்துவிட்டு செல்கின்றனர்.



கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதரமாக விளங்கி வரும் பவானி ஆற்றின் பகுதியில் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், உடல்நலப் பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையை தூய்மைப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...