பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்கள் வரவேற்பு

பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்களிடம் இருந்து பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்களை வரவேற்பதாகத் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

கோவை: பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்களிடம் இருந்து பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்களை வரவேற்பதாகத் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

சேலம் கோட்டத்தின் நீலகிரி மலை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்கள் மற்றும் தடங்கள், சிக்னல்கள், போன்ற ரயில்வே அமைப்புகள் பற்றிய தொன்மையான புகைப்படங்களை மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திட்டமிட்டுள்ளது. 

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்கள் தங்களிடம் புகைப்படம் இருந்தால் அவற்றை சேலம் கோட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தென்னக ரயில்வே சர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதி எடுத்த பின் அவை மீண்டும் உரியவர் கையில் திருப்பித் தரப்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் வழங்கியவர் பெயர் குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். எனவே, அத்தகு புகைப்படங்கள் வைத்திருப்போர், அவற்றை வழங்கி ரயில்வே நிர்வாகத்திற்கு உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என கூறப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...