உம்மன் சாண்டிக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பேன் - சரிதா நாயர்

சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி எதிராக வாக்குமூலம் அளிக்க இருப்பதாக நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார்.


கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி எதிராக வாக்குமூலம் அளிக்க இருப்பதாக நடிகை சரிதா நாயர் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார்.

காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், ஊட்டியைச் சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோவிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இத்தன்பேரில் சரிதா நாயர்,அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜரான பின் வெளியே வந்த சரிதா நாயர் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காற்றாலை மோசடி வழக்கு சமாதானமாக முடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர் உதவியாளர் ரவி, கணவர் ராதாகிருஷ்ணன், மற்றும் தம் மீதான வழக்குகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் சோலார் பேனல் மோசடி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் உம்மண் சாண்டி உள்ளிட்ட 19 பேர் மீது புதிய வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற மார்ச் 1ம் தேதி துவங்க உள்ளதாகவும் விசாரணை கமிசனில் அளித்த தகவல்களின் அடிப்படையில் உம்மன் சாண்டிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...