மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்

மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

கோவை: மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவரும், தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்க்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வினய் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகளவில் இந்திய மருத்துவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் 90 சதவிகிதம் இந்திய மருத்துவர்களே உள்ளனர். நேற்று சத்திஸ்கரில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பது உண்மையே. வெளி மாநிலத்தில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.



5 வருடத்தில் 36 தேர்வுகள் எழுது வேண்டும். 7 நாட்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் பணிச் சுமை காரணமாக மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வருகிறது. டெல்லியில் மருத்துவ மாணவர்கள் சரவணன் மற்றும் சரத்பாபு ஆகிய இருவர் தற்கொலையின் போதே இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு மூன்று கோரிக்கைகள் வைத்தது. அதை நிறைவேற்றி இருந்தால் ராமேவேஸ்வரம் மாணவரின் தற்கொலை நிகழ்ந்து இருக்காது. 

இரண்டு மாணவர்களின் மர்ம மரணத்தின் போதே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்போதே வலியுறுத்தினோம். தகுதி அடிப்படையில் சேரும் மாணவர்களின் மரணத்தில் உள்நோக்கம் உள்ளதா என்பதில் அறிந்தால் மட்டுமே மேலும் மாணவர்களின் மரணம் தொடராமல் இருக்கும். மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ உதவி மையம் அமைக்க வேண்டும். தமிழகத்தைப் போன்று மன அழுத்தம் காரணமாக மற்ற மாநிலங்களிலும் மாணவர்களின் மரணம் தொடர் கதையாகி வருகிறது. திருப்பூர் மாணவர்களின் மரணத்தில் இது வரை டெல்லி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், மூன்று மாணவரின் தற்கொலைக்கான உரிய காரணத்தை அரசுகளும், காவல்துறையினரும் துரிதமாக விசாரிக்க வேண்டும்." என்றார் 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...