யானை தாக்கி பண்ணைத் தொழிலாளி படுகாயம்

கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் பண்ணைத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

கோவை: கோவை அருகே காட்டு யானை தாக்கியதில் பண்ணைத் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்தார்.

பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியில் உள்ள பண்ணையில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு அப்பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரை துரத்திய காட்டு யானை துதிக் கையால் தாக்கியதில் படுகாயமடைந்தார். 

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, பண்ணையின் உரிமையாளர் பாதுகாப்பான முறையில் பண்ணையை பராமரிக்கவில்லை என்றும் யானை தாக்கிய தொழிலாளிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...