கேரளாவுக்கு தண்ணீர் திறந்தவிட்ட விவகாரம் : 2 ஆயிரம் விவசாயிகள் போராட்டம்

ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்ததை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி: ஆழியார் அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்ததை கண்டித்து பொள்ளாச்சி பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டம் மூலம் திருமூர்த்தி அணையில் இருந்து ஜனவரி 31-ம் தேதியில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு 2 - வது சுற்று தண்ணீர் திறந்து விடபட்டு, விவசாயிகள் பாசனம் செய்து வந்தனர்.

இன்றுடன் முதல் சுற்று நிறைவடைந்து 2-ம் சுற்று தண்ணீருக்காக விவசாயிகள் காத்திருந்தனர். இந்நிலையில், பரம்பிக்குளத்தில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்ற தண்ணிரை நிறுத்தி, ஆழியார் அணை மூலம் கேரளாவுக்கு, வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் மற்றும் பொங்கலூர் பகுதியில் இருந்து வந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்தும், 2-ம் சுற்று தண்ணீரை திறந்து விட கோரியும் கோஷங்களை எழுப்பினர். 

கடும் வறட்சியில் பாசன நீரை நம்பி பயிர்கள் செய்திருந்த நிலையில் திடீரென்று 2-ம் சுற்று பாசன தண்ணீரை நிறுத்தியதால் தென்னை உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இனால் 2-ம் சுற்று தண்ணீர் திறக்கும் வரை போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தையில் கேரளாவுக்கு திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்த முடியாது என்று பொது பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 



விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக பி.ஏ.பி திட்ட அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...