சிக்னலை மதிக்காத தனியார் பேருந்துக்கு அபராதம் : துரிதமாக செயல்பட்ட துணை ஆணையர்

கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவையில் போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் சென்ற தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை புரூக்பாண்ட் சாலை சிக்னலிக் நேற்று  TN 38 CD 8181 என்ற இலக்கமிட்ட தனியார் பேருந்து ஒன்று சிக்னலையும், போக்குவரத்து விதி முறைகளையும் மதிக்காமல் ஒரு வழிப்பாதையில் சென்றது. 

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

பொதுமக்கள் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புகார்கள் எழுந்தன. 

இதைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறையை மதிக்காமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்க கோவை மாநகர காவல்துறை போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் உத்தரவிட்டார். 

அந்த உத்தரவின் பேரில் வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு இன்று அந்த தனியார் பேருந்து ஓட்டுநரை மடக்கிப் பிடித்த மாநகர போக்குவரத்து போலீசார் சிகனலை மதிக்காமல் சென்றதாக அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர்.

விதி மீறல் குறித்த புகார் எழுந்தவுடன் துரிதமாக செயல்பட்டு அபராதம் விதித்த துணை ஆணையருக்கும் , மாநகர போலீசாருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...