வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தீ விபத்திற்குக் காரணம் என்ன?: அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையர் உத்தரவு

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமாக வெள்ளலூர் பகுதியில் 650 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. தனியார் அடுக்குமாறு குடியிருப்புகள், காய்கறிகள் மார்கெட்டுகள் என பெறப்படும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.மற்ற பகுதிகளில் சேகரிக்கப்படும் 

மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்படாமல் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பையில் கடந்த சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் தீப்பிடித்தது. வானை நோக்கி எழுந்த கரும் புகையால் அப்பகுதியில் உள்ள மக்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர். இரண்டு நாட்களாக தீயணைப்பு படை வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தின் உண்மையான காரணங்கள் கண்டறியும் பொருட்டு, நேற்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் 5 மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

இக்குழுவில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் லட்சுமணன், கிழக்கு மண்டல செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த விசாரணைக்குழு தீ விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...