விலை வீழ்ச்சியால் தக்காளியை குளத்தில் கொட்டிய விவசாயிகள்

அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி : அதிக விளைச்சல் காரணமாக சந்தைகளில் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் தக்காளியை குளத்தில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பெரும்பான்மையான பகுதிகளில் விளைந்த தக்காளியை பறிக்க செலவு அதிகமாக இருக்கிறது. தக்காளி விலை கிலோவிற்கு ரூ. 2 கிடைப்பதால் பறிக்காமல் அப்படியே வயலில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டூர், புளியம்பட்டி, சிங்கலம், கதிரம்பட்டி போன்ற இடங்களில் தக்காளி அதிகளவில் பயிரிடப்பட்டும், போதிய விலை இல்லாததால் அப்பகுதி விவசாயிகள் தக்காளியை டிராக்டர், டிராக்டராக குளத்தில் கொட்டி வருகின்றனர்.

விளைச்சல் குறைவான நேரங்களில் அதிக விலை கிடைக்கும். விளைச்சல் அதிகமான நேரங்களில் குறைவான விலை கிடைத்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. விவசாயிகள் தக்காளியை சேமித்து வைக்க குளிர்சாதன வசதிகளையும், மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற முறையான பயிற்சியும் மத்திய, மாநில அரசுகள் அளிக்க முன்வரவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான், தங்கள் விளைவித்த பொருளை உரமாக்காமல், நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்வோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...