கோவையில் மார்ச் 3-ம் தேதி சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடக்கம்

கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

கோவை : கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. 

போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது பெயர், விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு ஸ்மார்ட் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட் அட்டையைக் கொண்டு அருகிலுள்ள சைக்கிள் நிலையத்திலிருந்து தாங்களாகவே சைக்கிளை எடுத்துக்கொள்ளவும், மாநகரிலுள்ள எந்த நிலையத்திலும் நிறுத்திவிட்டுச் செல்லவும் முடியும்.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை வரும் மார்ச் 3-ம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் சார்பில் 3-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சியானது, ஆர்.எஸ். புரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...