தொடங்கியது +2 தேர்வு : கோவையில் 38,833 பேர் தேர்வு எழுதுகின்றனர்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 903 பேர் எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 833 பேர் எழுதுகின்றனர். 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவை கல்வி மாவட்டத்தில், 86 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 30 ஆயிரத்து 28 மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர, ஏழு மையங்களில் ஆயிரத்து 729 தனித் தேர்வர்களும் எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 மையங்களில் 6 ஆயிரத்து 805 மாணவர்களும், ஒரு மையத்தில் 341 தனித் தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர். 



தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் 12 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்த மையங்களில் இருந்து 23 வழித்தடங்கள் மூலமாக காலை 6 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. 20 மாணவர்களுக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் 2800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அனைத்து நோடல் மையங்களிலும், தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் 

கோவை கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 27 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 23 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 29 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 2 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை வருவாய் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 26 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 31 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு சார்ந்த, அனைத்து விதமான புகார்களையும், அறை கண்காணிப்பாளர் அல்லது நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த புகார்களை 0422-2391062 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...