மூன்றாண்டுகளில் 6,063 குழந்தைகள் மீட்பு - ரயில்வே கண்காணிப்பாளர்

தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

உதயம் தன்னார்வலர்கள் மற்றும் ரயில்வே காவல் துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆட்டோ ஒட்டுநர்கள், கால் டாக்சி ஒட்டுநர்கள், லோடு மேன்கள் மற்றும் போட்டர்ஸ் ஆகியோருக்கு அடையாள அட்டைகள் இன்று கோவையில் வழங்கப்பட்டன. இந்த அடையாள அட்டைகளை 266 பேருக்கு ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் வழங்கினார்.

ரயில் நிலையத்தில் குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலோ அடையாள அட்டை உள்ளவர்கள் உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். இதனால் குழந்தைகள் கடத்தப்படுவது, பெருமளவு தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஜோர்ஜி ஜோர்ஜ் பேசுகையில், "உலகில் குழந்தைகள் அதிகம் உள்ள நாடு இந்தியா. 18 வயதிற்கும் கீழ் உள்ள 45 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் உள்ளனர். குழந்தைகள் அனைவருக்கும் நல்ல கல்வி மற்றும் பாதுகாப்பு நாம் கொடுக்க வேண்டும். அது நம் கடமை. குழந்தைகள் தொலைந்து போனால் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையங்களுக்குத் தான் முதலில் அவர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் குழந்தைகளை பாதுகாக்க இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



குழந்தைகள் தனியாக வரும் போது சமூக விரோதிகளால் அவர்கள் கடத்தப்படும் வாய்ப்பு அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக ரயில் நிலையங்களில் 6 ஆயிரத்து 663 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 

கோவை ரயில் நிலையத்தை நூறு சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பு நிலையமாக மாற்ற முடியும். அதற்காக அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்." என்றார்.



இந்த நிகழ்ச்சியில் ரயில் நிலைய இயக்குநர் டி.சதிஷ் சரவணன், நிலைய மேலாளர் எல்.சின்ராசு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...