தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருகிறோம் - மொரிசீயஸ் துணை ஜனாதிபதி

மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

கோவை: மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழகர்கள் வசிப்பதாகவும், அவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருவதாகவும் அந்நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி தெரிவித்துள்ளார்.

மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம்பிள்ளை வையாபுரி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "சிரியாவில் நிகழும் வன்முறை துரதிஷ்டவசமானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது வருத்தமளிக்கின்றது. இந்தியா - மொரிசியஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மிக வலுவாக இருக்கின்றது. மொரிசியஸ் நாட்டில் 1.2 மில்லியன் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கிலம் வழியாகக் கற்கின்றனர்.

அவர்கள் தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரமப்படுகின்றனர். மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கையினை மொரிசீயஸ் அரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழர்களின் பண்டிகைகளான பொங்கல், சிவராத்திரி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். தமிழ் மொழியை தொடர்ந்து கற்று வருகிறோம்." என்றார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...