பேரனுக்காக பவுலராக மாறிய கருணாநிதி - வீடியோ

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தேறியுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. 

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சளி தொந்தரவு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதால் அவருக்கு தொண்டையில் ‘டியூப்’ மாட்டப்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதால் இன்னும் ஒரு சில மாதங்களில் தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள ‘டியூப்பை’ அகற்றிவிட மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

கருணாநிதியை அவரது மகள் செல்வி, மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தினமும் சென்று கவனித்து வருகின்றனர். கருணாநிதியின் பேரனும், நடிகர் அருள்நிதியின் மகனுமான மகிளனை (2) மு.க. தமிழரசு தினமும் தூக்கிக் கொண்டு கருணாநிதியுடன் விளையாட வைப்பது வழக்கம். இந்த நிலையில், கருணாநிதி தனது கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ பதிவை மு.க. தமிழரசு வெளியிட்டுள்ளார்.

நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதி பந்துவீச அதை கொள்ளுப்பேரன் கிரிக்கெட் மட்டையால் அடித்து மகிழ்கிறான். அப்போது, மகள் செல்வி கருணாநிதியை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி, நீங்கள் பவுலர், நாங்கள் பீல்டிங்கில் இருக்கிறோம். பந்தை போடுங்கப்பா என்கிறார். உடனே கருணாநிதி பந்து வீசுகிறார். இதை கொள்ளுப்பேரனும் கிரிக்கெட் மட்டையால் பந்தை அடிக்கிறான். ஓடி விழும் பந்தை தமிழரசுவின் மனைவி மோகனா எடுத்து கொடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் கருணாநிதி பந்தை வீசுவது போல் பாவலா செய்வதும், பந்தை வீசாமல் அடுத்த முறை வீசுவதும் சிரிப்பை உருவாக்குகிறது. உடனே செல்வியும் தமிழரசுவின் மனைவி மோகனாவும், எப்படி ஏமாற்றி பந்து வீசுகிறார் என்று சிரிக்கின்றனர். கருணாநிதி பந்து வீசும் போதெல்லாம் ‘சூப்பர்’ என்று செல்வி உற்சாகப்படுத்தி கை தட்டுகிறார். எப்படி பந்து வீசுகிறார் பாருங்கள் என்று மோகனாவும் பேசுகிறார். விளையாடியது போதுமா? என்று கேட்கிறார்கள். அப்போது விளையாடிக் கொண்டிருக்கும் கொள்ளுப் பேரன் தாத்தா பந்து போடுங்க என்று அழைக்கிறான். இந்தக் காட்சிகள் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார் என்பதை வெளிக்காட்ட இந்த வீடியோ வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...