தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த முன் வரவேண்டும்

தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா கூறியுள்ளார்.

கோவை: தொழில் துறையினர் திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும் என மிஸ் இந்தியா போட்டியின் பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா கூறியுள்ளார். 



கோவை மாவட்ட என்டர்புயூனர்ஸ் அமைப்பு சார்பில் தொழில்துறையின் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் மிஸ் இந்தியா போட்டியின் அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் ருக்‌ஷனா எய்ஸா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கலந்தாய்வு நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் துறைகளில் சிறந்து விளங்கும் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசுகையில், "அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்டர்புயூனர்ஸ் அமைப்பில் 52 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அமைப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்." என்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருக்‌ஷனா எய்ஸா, "இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் துறையினர் தங்கள் தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்தி கொள்ளவும் அதை எவ்வகையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட சிந்தனைகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் அதிக திறமை உடையவர்கள். மேலும், இந்த நிகழ்ச்சி தொழில் துறையினருக்குப் பயனுள்ளதாக அமையும். தொழில் துறையினர் எந்த இடத்திலும் தங்களை திறமைகளை வெளிப்படுத்த தயக்கமின்றி முன் வரவேண்டும்." என்று பேசினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...