வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கோவை : சிவகங்கையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

சிவகங்கை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜபாண்டி தலைமையில் வழக்கறிஞர்கள் சிவகங்கையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பேருந்தினை மறித்து ஓட்டுநரை, வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அரசு பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜபாண்டி உட்பட வழக்கறிஞர்கள் பலரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த கைது சம்பவத்தைக் கண்டித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும்படி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்தது. இதனை ஏற்று கோவை வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வழக்கு விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை. வழக்குகள் விசாரணையின்றி ஒத்திவைக்கப்பட்டன. வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...