தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டத்திற்கு ஆதரவில்லை : திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்கள் ஆதரவு அளிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 



டிஜிட்டல் சினிமா தயாரிப்பில் விதிக்கப்படும் உள்ளடக்கக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் புதிய திரைப்படங்களை வெளியிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு திரைப்பட விநயோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கெடுக்கப் போவதில்லை என திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர்  கூறும்பொழுது :- தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., வரி குறித்த பிரச்சனைக்கு முதலில் தீர்வு காண வேண்டும். அழிந்து வரும் சினிமா தொழிலில் அடிக்கடி வேலைநிறுத்தம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக அறிவித்த போராட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை. பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...