மதுரையில் போலீசாரை தாக்கிய இரு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மதுரை : மதுரையில் போலீஸ் சோதனையின் போது, போலீசாரை தாக்கிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிக்கந்தர் சாவடிப் பகுதியில் மாநகர காவல்துறை தனிப்படை போலீசார் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சில ரவுடிகள் தப்பி ஓடினர். சில ரவுடிகள் போலீசாரை கடுமையாக தாக்கினர்.  இதனால், போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில், ரவுடிகள் மந்திரி (எ) இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் பலியாகி உள்ளதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.

வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரு ரவுடிகளின் உடல்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு ரவுடிகளின் மீதும் ஏராளமான கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையிலுள்ள மிக முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய இரு ரவுடிகளும் திட்டம் தீட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போது மோதல் ஏற்பட்டதால், இருவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர் என போலீசார் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரவுடிகள் தாக்கியதில் போலீஸ் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும், போலீஸ் வருவதை அறிந்த சென்னையை அயானாவரத்தை சேர்ந்த ரவுடியான மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...