கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் : 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று  மாலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி விசாரித்த போது அதில் 108 பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 



இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த தர்மர் (50), பாண்டீஸ்வரன் (22),  இருளாண்டி (42) மற்றும் சதீஸ் குமார் (33) ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்திய கார், பணம் ரூ.1,50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...