ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவர் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோதிருப்பூர்: திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ராஜ்குமார். இவரது மனைவி தங்கம்மாள். இவர் தனியார் பள்ளி ஆசிரியராக பணி புரிகிறார். இவர்களது மகன் விவேகானந்தன் (13). இவர் தாராபுரம் சாலையிலுள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த விவேகானந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு விவேகானந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவன் விவேகானந்தன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், "சற்று காலதாமதமாக பள்ளிக்கு சென்றதால் என் ஆசிரியர்கள், பிரபாகரன், ரவி ஆகியோர் திட்டினர். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்." என்று எழுதப்பட்டிருந்தது.



இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சூழலில், மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டுவதாக கூறி அவரது உறவினர்கள் தாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து, அங்கு வந்த ஊரக போலீசார் கட்டாயமாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...