வன விலங்குகளுக்காக நீரை தேக்கி வைக்கும் பணியில் வனத்துறை

உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி: உதகை வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்க தொட்டிகளில் நீரை நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுவது வழக்கம்.

அவ்வாறு வறட்சி ஏற்படும் போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயரும்.



இந்தாண்டு, முன்கூட்டியே சிறியூர், ஆனைக்கட்டு, பொக்காபுரம், மாவெனல்லா, மசினகுடி, மாயார் உள்ளிட்ட வடக்கு வனக்கோட்டத்திற்க்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இதனால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் வனப்பகுதியை நோக்கி இட பெயரத் துவங்கியுள்ளன. இந்த இடப்பெயர்வை தடுக்க வனத்துறையினர் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் தேக்க தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணிரை லாரிகள் மூலம் கொண்டு வந்து நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...