சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை மீட்ட வனத்துறை

கோவையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய பச்சைக்கிளிகளை வனத்துறையினர் மீட்டனர்.


கோவை: கோவையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட பெரிய பச்சைக்கிளிகளை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்ட வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டியல் 4-ல் சேர்க்கப்பட்ட 'அலக்சாண்டரின்' வகை பெரிய பச்சைக்கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில், நேற்று முன் தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் விற்பனைக்காக இருந்த 10 பெரிய பச்சைக்கிளிகளை மீட்டனர்.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், "இவ்வகை பச்சைக்கிளிகள் கர்நாடக மாநிலத்தில் வாழ்பவை. அழகுக்காக இவற்றை வளர்க்க நினைக்கும் சிலர் இதன் இறகுகள் மற்றும் அலகுகளை வெட்டி விற்பனை செய்கின்றனர். இது சட்ட விரோதமானது." என்றனர்.

மீட்கப்பட்ட பச்சைக்கிளிகள் தற்போது கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பறவைகள் குணமடைந்த பிறகு அவற்றை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்று விட இருப்பதாக தெரிகிறது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...