நீலகிரியில் மெகா காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாபெரும் காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களுக்குத் தீர்வு காணும் வகையில், மாபெரும் காய்கறி சந்தை அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது அம்மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மற்றும் மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ், சைனீஸ் காய்கறிகள் என பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இந்த மலை தோட்ட காய்கறிகள் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் மவுசு அதிகம்.



இந்நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் மலை தோட்ட காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் சந்தையில் கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் உட்பட காய்கறிகளும் ஏலம் விடப்படும் நிலையில், முன் செல்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விளை பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. மதியம் 12 மணிக்குள் உதகையில் இருந்து மலை காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தைக்கு சென்று விட வேண்டும். இதனால், போதிய நேரமின்மை, கூலியாட்கள் செலவு என மூதலிட்டு வருமானமே கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலையடைகின்றனர்.



எனவே, நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒரு மெகா காய்கறி சந்தையை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.



இதுகுறித்து விவசாயி பிரகாஷ் கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் விளையக் கூடிய மலை தோட்ட காய்கறிகளை மேட்டுப்பாளையம் சந்தைக்கு எடுத்து சென்று ஏலம் விட வேண்டிய நிலை இருப்பதால் லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி என நாங்கள் போட்ட முதலீடு கூட கிடைப்பதில்லை. எனவே, மாவட்டத்தில் ஒரு மெகா காய்கறி ஏலச் சந்தையை அமைக்கும் முயற்சியை அரசு எடுக்க வேண்டும்," என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...