சிறப்பு கட்டண ரயில்களின் வழித்தடம் மாற்றியமைப்பு

கோடை சீசனையொட்டி திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கிடவு வழியாக மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : கோடை சீசனையொட்டி திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கிடவு வழியாக மாற்றியமைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த 23-ம் தேதி முதல் கோவையில் இருந்து இயக்கப்பட்டு வரும் இந்த ரயில்கள், கேரளா வழியாக செல்கின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் இணையதளத்தின் மூலமாக மத்திய அரசை வறுத்தெடுத்ததுடன், திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் ரயில்கள் தொலைதூரம் செல்வதாகப் புகார் தெரிவித்தனர். எனவே, பயண நேரத்தை குறைக்கும் விதமாக கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக சிறப்பு கட்டண ரயில்களை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தெற்கு ரயில்வே, திருநெல்வேலி, செங்கோட்டைக்கு விடப்பட்ட ரயில்களின் சேவைகளை கிணத்துக்கடவு ரயில்நிலையம் வழியாக மாற்றியமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 2 மணிநேரம் பயணநேரம் சேமிக்கப்படுகிறது. திங்கட்கிழமை தோறும், கோவையில் இருந்து சிறப்பு ரயில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 09.20 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. இதேபோல, செவ்வாய்கிழமையன்று செங்கோட்டையில் இருந்து மாலை 05.00 மணிக்கு கிளம்பும் அந்த ரயில், மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு கோவை வந்தடைகிறது. 

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை இரவு 11.50 புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 08.35 மணிக்கு சென்றடைகிறது. மாதந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 04.30 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...