முள்வேலியில் சிக்கிய கரடியை உயிருடன் மீட்ட வனத்துறையினர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்வேலியில் சிக்கிய கரடியை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முள்வேலியில் சிக்கிய கரடியை வனத்துறையினர் உயிருடன் மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர். 



கோத்தகிரி நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. அவ்வப்போது வனத்துறையினர் கரடிகளை விரட்டியும், கூண்டுகளை வைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றுவிட்டு வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கோத்தகிரி அருகே அரவேனு தவிட்டுமேடு பகுதியில் கரடி தனது 3 குட்டிகளுடன் தனியார் தேயிலை தோட்டத்தை கடக்க முயன்றது. 



அப்போது, அதில் ஒரு கரடி முள்கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கூறினர். ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல் முள்வேலியை வனத்துறை அதிகாரிகள் அகற்றினர். அப்போது, கரடி அங்கிருந்து தப்பிச் சென்றது. வனத்துறையினரின் இந்தச் செயல் பாராட்டுக்குரியது என்றாலும், குடியிருப்பு பகுதியிலேயே கரடியை விட்டதால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலால் அப்பகுதியினர் அதிருப்தியடைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் கரடிகள் தாக்கி தம்பதியர் இருவர் உயிந்தனர். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...