ஜெ.தீபா பேரவையை அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை

தேர்தல்களில் போட்டியிடும் வகையில் ஜெ.தீபா பேரவையை நிலையான அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜே. தீபா தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தேர்தல்களில் போட்டியிடும் வகையில் ஜெ.தீபா பேரவையை நிலையான அரசியல் அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் ஜே. தீபா தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா ஜே தீபா பேரவை சார்பில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஜே தீபா கலந்து கொண்டார். அப்போது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓர் ஆண்டுகாலமாக பேரவையாக நடத்தி வருகிறோம். தேர்தலில் நிற்க மற்றும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மிக விரைவில் பேரவையை நிலையான அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எடப்பாடி தலைமையிலான ஆட்சி, ஒரு ஆட்சி என சொல்லமுடியாது, இது பெரும்பான்மையற்றது. மத்திய அரசால் இயக்கப்படும் ஆட்சியாகும். என்றார். 

மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நடிகர்கள் பல பேர் முன்னதாகவே அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களின் கட்சியானது முழுமையாக அவர்களால் இயக்கப்பட வேண்டும். மத்திய அரசாலோ, மற்ற கட்சிகளாலோ இயக்கப்படக் கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின் நீதி விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதில்களே அளிக்கப்பட்டு வருகின்றனர். சசிகலா அணியினரின் தலையீடு அதிகபட்சமாக இருக்கிறது. எனக் கூறினார். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...