காவல்நிலைய வளாகத்தில் தீ குளித்து வாலிபர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல்நிலையத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி மாவட்டத்தில் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், காவல்நிலையத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

பென்னாகரம் தாலுகா மஞ்சாரஅள்ளி பஞ்சாயத்து மஞ்சாரபட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த மாது என்பவரின் மகன் ஆசைத்தம்பி (36). கடன் தொல்லையால் ஏற்பட்ட கருத்து வேற்பாட்டால் ஆசைத்தம்பியின் மனைவி பழனியம்மாள் பிரிந்து சென்றார். இதனால், தனியாக வாழ்ந்து வந்த அவர், சமீபகாலமாக மனமுடைந்து காணப்பட்டார். 

இதனிடையே, கடன் பிரச்சினை தொடர்பாகவும், மனைவியை சேர்த்து வைக்கக் கோரியும், ஒரு மாதத்திற்கு முன் ஏரியூர் போலீசில் ஆசைத்தம்பி புகார் அளித்துள்ளார். இதற்கு, பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர். இதனால், அதிருப்தியடைந்த அவர், 15 நாட்களுக்கு முன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில், நேற்று மாலை, 4:20 மணிக்கு ஏரியூர் காவல்நிலைய வளாகத்திற்கு வந்த ஆசைத்தம்பி, பெட்ரோலை, தன் மீது ஊற்றித் தீ வைத்து கொண்டார். இதில், உடல் முழுவதும் தீ பற்றி, அங்கேயே இறந்தார். அவரைக் காப்பாற்ற போலீசார் முயன்றும் பலனில்லை. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...