டாஸ்மாக் பாரில் மோதல் : காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய டாஸ்மாக் கடையின் பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 



பி.என்.ரோடு, நெசவாளர் காலனி பகுதியில் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று மாலை டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றவர்களுக்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதில் பாரில் இருந்த நாற்காலி மற்றும் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டன. மேலும், பார் உரிமையாளர் குட்டி என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளங்கோ, சிவக்குமார் ஆகியோருக்கு தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 



இந்த நிலையில், இளங்கோ, சிவக்குமார் ஆகியோரின் உறவினர்கள், பார் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பி.என். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, சம்பவம் குறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...