உதகை ரோஜா பூங்காவில் துளிர்விடும் ரோஜா மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.



இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு வகையிலான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உதகைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 27 ஆயிரம் செடிகளில் வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் 4 ஆயிரம் ரகங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ரோஜா பூங்காவின் ஒவ்வொரு பகுதியாக ரோஜா மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. இது உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...