பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் அணையைப் பார்வையிட தீர்மானம் நிறைவேற்றம்

வரும் 7-ந்தேதி பவானிஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டிவரும் இடத்தைச் சென்று பார்வையிடுவது என கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை : வரும் 7-ந்தேதி பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணையைக் கட்டிவரும் இடத்தைச் சென்று பார்வையிடுவது என கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பவானி ஆற்றின் குறுக்கே சோலையூரில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக, கோவை மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம், கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளருமான கு. இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில், தி.மு.க., மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக், தி.மு.க., மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, மாநகர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன், ம.தி.மு.க. மாவட்ட துணை அமைப்பாளர் ராஜீவ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல தலைவர் சுசி. கலையரசன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தங்கராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆறுசாமி மற்றும் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆம் ஆத்மி கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டிவரும் இடத்தை 7-ந்தேதி அனைத்து கட்சியினர் சென்று பார்வையிடுதல்,  கேரள முதலமைச்சரை சந்தித்து பேசுதல் மற்றும் கோவையில் லட்சக்கணக்கானோரை திரட்டிப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...