வனவிலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி

கோவையில் வனஉயிரின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வனவிலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி நடத்தப்பட்டது.

கோவை : கோவையில் வனஉயிரின பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வனவிலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மனிதசங்கிலி நடத்தப்பட்டது. 

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி மற்றும் உதகை செல்லும் மலைச் சாலைகளில் வாகனம் மோதி மான், குரங்கு காட்டெருமை போன்ற வன உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் இவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகள் வனச்சாலை ஓரங்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி எறிவதே ஆகும். மேலும், சிலர் சாலை ஓரங்களில் நிற்கும் குரங்குகள் மற்றும் மான்களுக்கு தங்களிடம் உள்ள உணவு பொருட்களை கொடுப்பதால் இப்பகுதி சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. 

பயணிகள் வீசும் வீணான உணவு பொருட்களை உண்ணும் நோக்கத்தோடு சாலையில் திரியும் இதுபோன்ற விலங்குகள் வாகனம் மோதி உயிரிழப்பது அடிக்கடி நடந்து வரும் நிகழ்வாகி மாறி வருகின்றது. இதனைத் தடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு வனத்துறை மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் இணைந்து வன உயிரின பாதுகாப்பு நாளான இன்று பொதுமக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மனித சங்கிலி நடத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் கல்லார் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஏராளமானோர் விழிப்புணர்வு மனித சங்கிலியில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அவ்வழியே செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நின்றனர். பின்னர், அவ்வழியே செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். சாலை ஓர விலங்குகளுக்கு உணவு கொடுப்பதும், வனப்பகுதியை ஒட்டி வாகனங்களை நிறுத்துவதும் வனசட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை வனத்துறையினரும் அறிவுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனத்துறையினர் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...