உலக வனஉயிரின நாள் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை : வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



வால்பாறையின் உலக வன உயிரின நாளை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வால்பாறை பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லுரி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை தபால் நிலையம் சென்றடைந்தனர்.

இப்பேரணியில் வனத்தைக் காப்போம், வன உயிரினங்களைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இப்பேரணியை வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...