17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் உட்பட இருவர் கைது

தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்புறுத்தல் செய்த முதியவர் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தை சேர்ந்தவர் அகல்யா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 10-ம் வகுப்பு வரை பயின்று வீட்டில் இருந்து வருகிறார்.

அகல்யாவை அதே பகுதியை சேர்ந்த வங்கி காவலாளி மோசஸ் (70) மற்றும் மனோஜ்குமார் (29) இருவரும் தனிதனியே அகல்யாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர் ஆறு மாதம் கர்ப்பம் என்று கூறப்படுகிறது. தனது மகள் பாலியல்பலாத்காரம் செய்யபட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அகல்யா-வின் தந்தை தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக70 வயது முதியவர் மோசஸ் மற்றும் வாலிபர் மனோஜ்குமார் ஆகியோரை கைது செய்தார்.

இச்சம்பத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...