அனுமதியின்றி மரங்கள் வெட்ட முயற்சி: தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள்

மேட்டுப்பாளையத்தில் சாலையோரம் உள்ள பழமையான மரங்களை உரிய அனுமதி இல்லாமல் வெட்ட முயன்ற கும்பலை இயற்கை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் சாலையோரம் உள்ள பழமையான மரங்களை உரிய அனுமதி இல்லாமல் வெட்ட முயன்ற கும்பலை இயற்கை ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேட்டுப்பாளையம் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 50 ஆண்டுகள் வரை பழமையான வேம்பு மற்றும் புளியன் வகையை சேர்ந்த பழமையான ராட்சத மரங்கள் இருக்கின்றன.

நேற்று மாலை உரிய அனுமதி இன்றி சிலர் சாலை ஓரத்தில் இருந்த மூன்று வேம்பு மரங்களை வெட்டுவதை கண்டு இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



தொடர்ந்து, பொதுமக்கள் உதவியுடன் அதனை தடுத்து நிறுத்தினர்.

மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மூன்று மாதங்களுக்கு முன் ஓடந்துரை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக வழங்கபட்ட அனுமதி கடிதத்தை தவறாக பயன்படுத்தி பழமையான மரத்தை வெட்ட முயன்றது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து வருவாய்துறைக்கு தகவல் அளிக்கபட்டது.

தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வளர்ச்சி பணிகளுக்காக மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நட அரசு உத்தரவிட்டு வரும் நிலையில், பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பழமையான மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...