ஊட்டியில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றவர் கைது

ஊட்டியில் ரூ.26 ஆயிரம் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி: ஊட்டியில் ரூ.26 ஆயிரம் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர். 

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கள்ள் நோட்டுக்கள் அதிகம் புழங்குவதாக ஊட்டி நகர காவல் நிலையத்தில் தொடர் புகார்கள் எழுந்தன. 

குன்னூர் பகுதியிலும் இந்த புகார் இருப்பதை அறிந்த போலீசார் கேஷ்பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு தங்கியிருந்த கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பிரகாஷ் ராஜ் (28) என்பவர் அறையை காலிசெய்து சென்றுள்ளது தெரியவந்தது.

தகவலறிந்து அவரை தேடியபோது மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பிடிபட்டார்.

அவரை ஊட்டி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவரிடமிருந்த இருபத்து ஆறாயிரம் மதிப்புள்ள பதிமூன்று 2 ஆயிரம் ரூபாய், ஒன்பதாயிரம் மதிப்புள்ள 18 ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.



தொடர்ந்து விசாரனை நடத்திய போலீசார் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...