காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை - ஈஸ்வரன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். 

இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 

காவிரி மேலாண் வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் 6 வார கெடு கொடுத்த பின்பும் மத்திய அரசு அதனை செயல்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்திப்பதாக முடிவெடுத்தும் அதற்கான அனுமதி கொடுக்காதது பா.ஜ.க.வின் உள்நோக்கத்தை காட்டுகிறது.

தமிழக முதலமைச்சர் நேற்று எதிர்கட்சி தலைவரை சந்தித்து பேசியுள்ளார். அனைத்து கட்சியினரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முயற்சித்து வருகிறோம்

கேரள அரசு சிறுவாணி தண்ணிரை தடுக்க அணை கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதை முழுமையாக எதிர்க்கும் நாங்கள் அதனை தடுக்க எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். 

கோவைக்கு சிறுவாணி தான் குடிநீர் ஆதாரம். தொடர்ந்து, அணையை தகர்த்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம். அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நினைதுக் கொண்டிருக்கிறோம். வடகிழக்கு மாகாணங்களில் பா.ஜ.க வெற்றி என்பது இந்தியா முழுவதும் தொடரும் என நம்பினால் அது அவர்களுக்கு ஏமாற்றம். திரிபுராவில் கம்யூனிஸ்டு கொள்கைகளுக்கு எதிராகத்தான் பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க தோற்றிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...