மத்திய கப்பல்படை ஊழியர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை கடத்த முயன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை கடத்த முயன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ‘சில்க் ஏர்லென்ஸ்' விமானத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கோவை விமானத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தனித்தனியாக சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்தவரும் மத்திய கப்பல்படை ஊழியரான செல்வமணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அவருடைய பேக்கில் தடைசெய்யப்பட்ட 14.5 கிலோ கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.1.5 கோடி. இந்தியாவில் விலங்குகளுக்கு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு,சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் போதைப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இதனால், கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை மீறி கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடை சிங்கப்பூருக்கு கடத்த முயன்றை செல்வமணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், செல்வமணிக்கு உதவியாக இருந்த கோவை விமான நிலையத்தில் பணிபுரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் கோவையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்பு இருவரும் அரசு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை, கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் கடத்தல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று நடந்தது.அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டார். விசாரணையின் இறுதியில் செல்வமணி, ராமகிருஷ்ணன் இருவர் மீதான கடத்தல் குற்றம் நிருபிக்கப்பட்டது. இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...