கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மகளிடம் நகை பறிப்பு

கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

கோவை: கோவையில் சீருடையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளிடம் இருந்து மர்ம நபர்கள் ஒரு சவரன் நகையை பறித்துச் சென்றனர்.

உக்கடம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணி புரிபவர் வெள்ளியங்கிரி. இவரது மகள் லாவண்யா.

இன்று காலை தனது மகளை சென்னை அனுப்பி வைப்பதற்காக ரயில் நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது பி.ஆர்.எஸ் மைதானம் முன்பு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் லாவண்யாவின் கழுத்தில் இருந்த 1 பவுன் நகையை பறித்துச் சென்றார்.

காவலர் குடியிருப்பின் அருகில், காவல்துறையை சேர்ந்த ஒருவர் சீருடையில் இருந்தபோதே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடர்ந்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...