கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, பணம் கொள்ளை

கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.



கோவை: கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. 

சூலூரில் வசித்து வருபவர் ரங்கசாமி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். கடந்த வியாழன் அன்று ரங்கசாமி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொடுமுடிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை வீடு திரும்பிய ரங்கசாமி முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ-வில் இருந்த 25 சவரன் நகை, தொலைக்காட்சி பெட்டி மற்றும் மைக்ரோ வேவ் ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.



இதையடுத்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு சம்பவம்

திருப்பூர் தாராபுரம் சாலை அமராவதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருண. டையிங் தொழில் செய்து. நேற்று காலை உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் சிவன்மலை சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 18 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய அருண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது இக்கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...