பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டி: 272 பேர் பங்கேற்பு

பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை: பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 272 வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பொள்ளாச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் போட்டியில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இருந்தும் கேரள மற்றும் கர்நாடகாவில் இருந்தும் 272 பேர் பங்கேற்றனர்.



எடை வாரியாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றவர்கள் தங்களது திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். 55 கிலோ எடை வரை ஒரு பிரிவாகவும், 55 முதல் 65 கிலோ எடை, 65 முதல் 75 கிலோ எடை, 75 முதல் 85 கிலோ எடை, 85 க்கும் மேல் என்று பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. 

இந்த பிரிவுகளில் முதல் இடம் பிடித்த ஆணகழனுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

அனைத்துப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஓப்பன் கேட்டகிரி போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் பரிசு பெற்றவருக்கு இருசக்கர வாகனமும், இரண்டாம் பரிசு பெற்றவருக்கு குளிர்சாதன பெட்டியும் வழங்கப்பட்டது. 

இந்த மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் பூனேவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியில் முதன் முறையாக ஆணழகன் போட்டி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...