புதிய கட்டிடங்களுடன் உதகை உழவர் சந்தை: குறைகள் இருப்பதாக குற்றச்சாட்டு

புதிய கட்டிடங்களுடன் தயாராகி வரும் உதகை உழவர் சந்தையில் பல்வேறு குறைகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி: புதிய கட்டிடங்களுடன் தயாராகி வரும் உதகை உழவர் சந்தையில் பல்வேறு குறைகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

உதகை உழவர் சந்தையில் ரூ.26.38 லட்சம் மதிப்பில் 20 கடைகள், மேற்கூரைகள் மற்றும் மின்னணு தராசுகளுக்கு சார்ஜ் செய்யும் இடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.

உதகை உழவர் சந்தையில் தற்போது 62 கடைகள் உள்ளன. இது தவிர ஏராளமான விவசாயிகள் உழவர் சந்தையின் உட்பகுதியில் உள்ள காலியான இடங்களில் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், தற்போது விவசாயிகளின் நலன் கருதி புதிதாக கூடுதல் கடைகளும் மழை மற்றும் அதிகப்படியான வெயில் கொளுத்தும் நேரங்களில் பொது மக்களும் விவசாயிகளும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் மேற்கூரைகளும் அமைக்கும் பணியில் உழவர் சந்தை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி உழவர் சந்தை நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி தொடர்பாக பிரகாஷ் என்ற விவசாயி கூறுகையில், "உழவர் சந்தை நிர்வாகம் சாரியான பணியை மேற்கொண்டாலும் இந்த பணியில் ஒரு சில குறைபாடுகள் உள்ளது. அதனை சாரி செய்ய நிர்வாக தரப்பில் கவனம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மேற்கூரை அமைத்த பகுதிகளில் போதிய இடைவெளியோடு வெளிச்சம் தரக்கூடிய மேற்கூரைகள் அமைக்காத காரணத்தால் இருள் சூழ்ந்த தன்மை உள்ளது. மேலும், புதிதாகக் கட்டப்பட்ட கடைகள் ஒற்றைச் செங்கல் முறையில் கட்டப்பட்டுள்ளதால் போதிய பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லை." என்றார். 

இது குறித்து உழவர் சந்தை நிர்வாகத்திடம் கேட்டபோது, "பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. குறிப்பிட்டுள்ள குறைபாடுகளை பணிகள் நிறைவு பெறுவதற்குள் சாரி செய்துவிடுவோம்." என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...