கஞ்சா விற்பனையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் , மாவட்டம் முழுவதும் காவல் துறை உதவியோடு கஞ்சா விற்கப்பட்டு வருகிறது என்று கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முன்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 



இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், " இரண்டு முறை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரிடமும் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் மாதம்பட்டி பகுதியில் காவல் துறையினரின் உதவியோடு கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதனைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டதில் ஈடுபட்டோம். 

தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஈஸ்வரன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...