கலாம் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்த ஆளுநர்

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.


மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதனையடுத்து, கோயிலுக்குள் நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் ஆளுநர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்று, கலாமின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார். அப்போது, கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்கயாருக்கு பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தினார். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்தார். பின்னர், இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதைத்தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ராமநாதபுரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணத்தையொட்டி ராமநாதபுரம், திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...