பசுந்தேயிலைக்கு உரிய விலை வேண்டி நீலகிரியில் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயமாக ரூ.30 வழங்கக்கோரிய இறுதி போராட்டம் இன்று அதிகரட்டி பகுதியில் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளையும் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயமாக ரூ.30 வழங்கக்கோரிய இறுதி போராட்டம் இன்று அதிகரட்டி பகுதியில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை பிரதான விவசாயமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள தேயிலை தூள் உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பசுந்தேயிலைக்கு ரூ.30 விலை கோரி இன்று இறுதி கட்ட போராட்டம் அதிகரட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலகொலா அருகே உள்ள மகாலிங்கா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்பு நடைபெற்றது.



இப்போராட்டத்தில் மணியட்டி, நுந்தளா, அதிகரட்டி, பால கொலா, தாம்பட்டி, உள்ளிட்ட 7 கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில், "அரசு தேயிலை தொழிற் சாலை நிர்வாகம் மிகவும் சீர்கேடாக உள்ளது. இதனால் இத்தொழிற்சாலைகளின் நிர்வாகத்தால் இந்த கூட்டுறவு தொழிற்சாலைகள் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விவசாயிகளுக்கு விலை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும் உதகையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.2 மானியம் அளிப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு மானியம் கிடைக்கவில்லை எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...