உறவினர் போல் திருமணத்திற்கு வந்து நகை பணத்தை சுருட்டிய மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை

கோவை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு உறவினர் போல் வந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் மற்றும் சிங்கப்பூர் வீசா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை : கோவை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு உறவினர் போல் வந்த மர்ம நபர்கள் ரூ.50 ஆயிரம் பணம், 5 செல்போன்கள் மற்றும் சிங்கப்பூர் வீசா ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். 

கோவை பீளமேட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது மணமகனின் தாய் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம், சிங்கப்பூர் செல்ல வைத்திருந்த விசா மற்றும் உறவினர்கள் வைத்திருந்த 5 செல்போன்கள் மாயமாகின. இது தொடர்பாக போத்தனூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மண்டபத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது, உறவினர்கள் போல வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அவர்கள் சேலம் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றதும் தெரியவந்தது. 

அந்த வாகனம் சேலத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமானது என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உறவினர் போல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...