ஒப்பந்த மின்வாரிய தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மனு

மின்வாரியத் துறையில் ஒப்பந்த முறையில் பணி செய்யும் ஊழியர்களை பணிநிரந்தர செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை : மின்வாரியத் துறையில் ஒப்பந்த முறையில் பணி செய்யும் ஊழியர்களை பணிநிரந்தர செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. 



கடந்த 1998-ம் ஆண்டு முதல் இன்று வரை கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரியப் பிரிவு அலுவலகங்களிலும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக மின்பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எந்தவொரு பணிபயனும் வழங்கக் கூடாதென முடிவு செய்தது. இதற்காக 31.06.2008-ம் ஆண்டு முதல் மின்வாரியத்தில் மின்வாரிய பணிவிபரக்குறிப்பான ஏ.இ. சான்றிதழ், பி.சி.பி, சிட் ஒப்பந்தம், கே-2 ஒப்பந்தத்தில் வேலை செய்துள்ளதால் தங்களை மின்சார வாரிய நிர்வாகம் பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும். 

இந்த நிலையில், ஒப்பந்த புள்ளிகள் பெற்ற ஒப்பந்ததாரரின் மூலமாக மின்சார வாரியத்தில் நேரடியாகப் பணிகள் வழங்கப்படுகின்றன. மின் ஒப்பந்தப்புள்ளி பெற்ற ஒப்பந்ததாரரின் பணி முடிவுற்ற பின்பு மறு ஒப்பந்ததாரரின் பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன. 1985-ம் ஆண்டிற்குப் பிறகு பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்ததாரரின் மூலம் பணி செய்தவர்களை காலித் ஆணையத்தின் தீர்வின்படி தினக்கூவி அடிப்படையிலோ அல்லது சி.எல்.ஆர். டி.சி.எல்., முஷ்தூர் அல்லது கள உதவியாளர்களாகவோ பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். மேலும், மின்வாரிய ஆணை எண்-9, நாள் 09/10/2010-ன்படி பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ள போது அடையாளம் காணப்பட்ட ஒப்பந்த ஊழியராகக் கணக்கில் கொண்டு மின்வாரிய ஆணை எண்:110ன் படி ரூ. 1,500 கருணைத்தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...