ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சி

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தொடங்கிய இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சியை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

கோவை : கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் தொடங்கிய இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சியை மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 

கடந்த மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது, கோவையில் பாதுகாப்புதுறை சம்பந்தமான ஒரு கண்டுபிடிப்பு மற்றும் அடைகாக்கும் மையத்தை உருவாக்க கொடிசியாவிற்கு ரூ. 20 கோடி வழங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கோவை பிராந்தியத்தில் உள்ள சிறு, குறு, மத்தியரக தொழில் நிறுவனங்களால் ராணுவ தளவாடங்களில் எந்த வகையிலான பொருட்களை தயார் செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வதற்காக பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக இந்தக் கண்காட்சியில் பங்குபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் இந்திய ராணுவத்தின் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்த பொருட்காட்சி இன்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கும் ராணுவ தளவாடங்களில் 400-க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியால் சிறு, குறு மற்றும் மத்திய தொழில்துறை நிறுவனங்களால் ராணுவ தளவாடங்களின் பொருட்கள் குறித்த அடிப்படையைத் தெரிந்து கொள்வதோடு, தங்களால் எந்த மாதிரியான பொருட்களை தயாரிக்க முடியும் என்ற தெளிவிற்கும் வர முடியும் என கொடிசியா அமைப்பின் தலைவர் சுந்தரம் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறும்போது :- கோவையில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த கண்காட்சியின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதீத வளர்ச்சியை எட்ட இந்த கண்காட்சி பெரிதும் உதவும். மேலும், இந்திய அரசாங்கம், சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஒசூர், பெங்களூர் ஆகிய இடங்களை இணைத்து ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் வழித்தடத்தை உருவாக்க இருப்பதால் சிறு, குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களால் ராணுவத்திற்கு வேண்டிய தளவாடங்களை தயாரிப்பது எளிதாகி உள்ளது. என்றார். 

பெல், இந்திய கப்பற்படை, இராணுவ படை போன்ற பத்துக்கும் மேற்பட்ட பெரும் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் தங்களுடைய தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் ஆள் இல்லா விமான மாதிரி, போரின் போது பயன்படுத்தப்படும் விதவிதமான துப்பாக்கி வகைகள், கப்பலுக்கு தேவையான உதிரிப்பாகங்கள், மோட்டார் வகைகள் உள்ளிட்ட வகைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர். 

கோவையில் முதன் முறையாக நடைபெறும் இக்கண்காட்சியின் மூலம் நமது நாட்டின் வளர்ச்சி பற்றி அதிகளவு தெரிந்து கொண்டதாகவும், ரசியா, அமெரிக்கா நாடுகளுக்கு இணையாக நமது நாடும் உள்ளது என்பதை இக்கண்காட்சி மூலம் அறிந்து கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். நாளை வரை நடைபெறும் இராணுவ தளவாடங்கள் கண்காட்சியைப் பள்ளி, மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு நமது நாட்டின் பெருமை, வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...