சிரியா தாக்குதலை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெற்று வரும் மனிதப் படுகொலைகளை கண்டித்து திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் : சிரியாவில் நடைபெற்று வரும் மனிதப் படுகொலைகளை கண்டித்து திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 



திருப்பூர் - காங்கயம் சாலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிரியாவில் நடைபெற்று வரும் மனித படுகொலைகளை கண்டித்து மாவட்ட தலைவர் ஹைதர் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிரியாவில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், ஐ.நா. சபை இந்த மனித உரிமை மீறல் விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிரியா விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பதை தவிர்த்துவிட்டு சிரியா மக்களின் பாதுகாப்பிற்க்காக குரல் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து சிரியா அதிபரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்த முயன்ற போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உருவபொம்மையை பறித்த போலீசார் ஓடும் பேருந்தில் ஏறி தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிரியா அதிபரின் உருவப்படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...