விளாங்குறிச்சியில் வீணாகுது குடிநீர்

விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: விளாங்குறிச்சி அருகே குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை விளாங்குறிச்சியில் இருந்து காளப்பட்டி சாலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் காளப்பட்டி பகுதி 33, 34, 35 மற்றும் 36 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக வெளியேறும் குடிநீர் ஆறு போல ஓடி அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது.



இது குறித்து சமூக ஆர்வலரான செல்வராஜ் கூறும்போது, "மேற்குறிப்பிட்ட வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தினமும் இந்த உடைப்பின் காரணமாக பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. மேலும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அதிகாரிகளிடம் முறையிட்டால் மெத்தனமான பதில் தருகிறார்கள். இது வேதனை அளிக்கிறது. குடிநீர் வீணாவதைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...