சூலூர் வட்டாரத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள் : அச்சத்தில் பொதுமக்கள்

கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சூலூரில் வசித்து வரும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ரங்கசாமி. கடந்த சனிக்கிழமை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு ரங்கசாமி தனது குடும்பத்துடன் சென்றார். மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை, டிவி மற்றும் மைக்ரோ ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

அதே போல், கடந்த ஞாயிற்றுக் கிழமை காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து ரூ. 80,000 மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இந்த இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிந்தாமணிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது இரும்பு கடையின் பூட்டை உடைத்து நேற்று இரவு ரூ.2.5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...